இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் அருள் - 1008 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - 17/06/2021
ஆதி
சித்தனை மனதில் எண்ணி, உரைக்கின்றேன் அகத்தியன். இனி நாளும், ஒவ்வொரு
பிரச்சினையும், ஒவ்வொரு குடும்பத்தில் நேரும் என்பேன். இதனால், இறைவனை
பாடிப்பாடி தொழுதால் மட்டுமே, விடிவுகாலம் உண்டு என்பேன். வரும்
காலங்களில், பல குற்றங்கள் நடைபெறும் என்பேன். என்பேன், இதற்கும் சமமான,
ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்வார்கள். வாழ்வார்கள், பின் மழையும்
நிந்தித்து, ரத்த வெள்ளமாக போகும். போகும் அதனால், மன நிலை மாறும், இறை
நம்பிக்கை சற்று குறையும், என்பேன். வரும் காலங்களில், ஆங்காங்கே, சில சில
பூகம்பங்களும் ஏற்படும் என்பேன். மறைமுகமாக இன்னும் சில தீய வினைகள்.
ஆனாலும், இறைவனை வணங்கினால் மட்டுமே, விடிவுகாலம் உண்டு. மற்றவை எல்லாம்
ஆகாது என்பேன். ஆகாது என்பேன், வரும் காலங்களில், நெருப்பு மழையும்
பொழியும் என்பேன். மனிதர்களின் குணங்கள் மாறும் என்பேன். ஒழுக்கம் இல்லாத
வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால், தன் இனத்திற்கு தகுந்தாற்போல் வாழ்க்கையை
அமைத்துக் கொள்ளாமல், நாடோடியாக திரிவார்கள். திரிவார்கள் என்பேன்,
மனிதர்கள், சில சில சமயங்களில், உண்மை இல்லாமல் வாழ்வார்கள். ஆனாலும்,
இறைவன் நம்பிக்கை குறைந்து விடும். இறைவன் மீதுள்ள அன்பும் குறைந்து
விடும். பின் அப்படி இறைவன் மீது நம்பி, அன்பு கொண்டாலும், மன மாற்றங்கள்.
மனமாற்றங்கள்
வேண்டாம் அப்பனே! அப்பனே, மனதுள், இறைவன் இருக்கின்றான் என்று பலமாக
பிடியுங்கள். இறைவன் இருக்கின்றான் என்று பிடித்தால் மட்டுமே, வரும்
காலங்களில் தப்பித்துக் கொள்ளமுடியும். இப்பொழுதும் கூட ஒவ்வொருவருக்கும்,
ஒவ்வொரு பிரச்சினையாக இருந்து கொண்டு இருக்கின்றது. சொல்லத் தெரியாமலே,
மனிதர்கள் தவிக்கின்றனர். பரிகாரமாக, அதை செய்வோமா, இதை செய்வோமா என்று.
ஆனால், எவ்வித பரிகாரமும் செயல் படவில்லை. செயல் படவில்லை என்பேன். சில சில
நேரங்களிலும், அவதார புருஷர்கள் வருவார்கள், இவ்வுலகில், காப்பாற்ற.
காப்பாற்ற அதி விரைவில் வருவார்கள். முறையாக நடந்தாலும், முறையற்றதாக
நடந்து போகும் கலியுகத்தில். கலியுகத்தில், இன்னும் பல பெரியோர்களை மதிக்க
மாட்டார்கள் என்பேன். பின் குருவை நிந்திப்பார்கள் என்பேன். குருவருள்
இல்லாமல் திருவருள் கிடையாது என்பது போல், குரு என்று சொல்லியெல்லாம்
ஏமாற்றி விடுவார்கள். ஏமாற்றிவிடுவார்கள், குருவையே. பின் நல் முறையாய்
நட்புக்கள் வைத்திருந்தாலும், நட்பில் பிரிவு ஏற்படும். அதனால், பாவங்கள்
கூடிக்கொண்டே இருக்கும்.
எனவேதான்,
இறை நம்பிக்கை இருந்தால் மட்டுமே, பிழைக்க முடியும் என்பேன். ஆனாலும், இறை
என்று கெளரவத்துக்காக பிடிப்பார்கள். பிடிப்பார்கள், வீணான வாழ்க்கையை.
வீணான வாழ்க்கை உண்டு நிச்சயம். ஆனாலும் இறைவன் அனைவரையும் காப்பாற்றுவான்.
ஆனாலும் மற்றவைகள் எல்லாம் இறைவனை நோக்கி இல்லாத போது, பின் கீழ் நோக்கி
விழுதலே ஆகும். ஆனாலும், அவை போன்று செயல்பட விடாதீர்கள் என்பேன்.
என்றாலும், மனதைரியத்துடன், எது நடக்குமோ, அது நன்றாக நடக்கும் என்று இரு.
அனைத்தும் நன்மைக்கே. எதை இங்கு கொண்டு வந்தாய், கடைசியில் எதை கொண்டு
போகிறாய் என்று நினைத்தாலே, முக்தி நீ பெறுவாய். இதனுள்ளே வாழ்க்கையை
நன்றாக வாழ வேண்டும். வாழ வேண்டும், அதோடு நற்பண்புகளை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும். நற்பண்புகள் ஏற்படுத்தி, சில தீய வினைகள் அகல வேண்டும்.
அப்பனே!
ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன். நற்பண்பு, கருணை, இவை இருந்தால் மட்டுமே,
இவ்வுலகத்தில் இனி வாழ முடியும். பின் பொய், களவு, திருட்டு, பின் மனதை பல
வழிகளில் செலுத்தி விட்டீர்களானால், அழிந்து விடுவீர்கள். மனிதனை
அழிப்பதற்கு இங்கு யாரும் இல்லை. மனிதனை, மனிதன்தான் அழித்துக்
கொண்டிருக்கின்றான். இதுதான் உண்மை. ஆனாலும், நல்முறையாய், எதனை என்று
தீர்மானிப்பதற்கு, இங்கு பல சித்தர்களும், தவம் செய்து
கொண்டிருக்கின்றார்கள், உலகத்தை காப்பாற்ற. காப்பாற்ற தோன்றுவார்கள்,
அங்கங்கே. ஆங்காங்கே தோன்றி, மற்ற பொய்யான குருக்களை கொண்டு வருவார்கள்,
வெளியே. எச்சரிக்கின்றேன், இப்பொழுது கூட. நிச்சயமாய் மாறுங்கள்,
மாறுங்கள், மாறுங்கள் என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றேன். அதனால்,
இப்பொழுதே மாறிக் கொள்ளுங்கள். பின் சித்தர்கள் வருவார்கள். சித்தர்களே,
பின் பொய்யான வழிகளை செய்துகொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்து, பின்
அவர்களே, சித்தர்களே, வெளிக் கொண்டு வருவார்கள். அப்பொழுது. தேவை இல்லாமல்,
நீங்களே தலை குனிந்து நிற்காதீர்கள். இப்பொழுதே சொல்லுகின்றேன்.
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், எதனை என்று. எதனை என்று பார்த்தால்,
பூலோகத்தில் இருந்து, திரிந்து, திரிந்து கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால்,
தற்பெருமைக்காக சிலர், சிலர் எதனையும் செய்யாமலே இருக்கின்றனர். எல்லாம்,
பொய்யானதே. பொய்யானதே! எந்தனுக்கும் கோபம் கூட வருகின்றது. ஆனால்,
அகத்தியன்! அகத்தியனே! அகத்தியர் அப்பா! என்று மனமார கூறுகின்றனர். ஆனால்
இவ்வாறு கூறிய பொழுதே என் கருணை தாங்கவில்லை. ஆனால் செய்வதோ தவறுகள்.
வேண்டாமப்பா! அத்தவறுகள் பின் தண்டித்தால், ஒன்றை மட்டும் கூறுகின்றேன். நீ
செய்யும் தவறுகள் சிறிது தூரம் செல்லக்கூடும். ஆனால் அங்கே ஒரு பள்ளம்,
அதில் விழுந்து விட்டால், யாரும் காப்பாற்ற முடியாது. இறைவனும் காப்பாற்ற
முடியாது. சித்தர்கள், யாங்களும் காப்பாற்ற முடியாது. சொல்கின்றேன். ஏன்
என்றால், தவறுமேல் தவறு செய்யாதே என்று எச்சரித்துக் கொண்டேதான்
இருக்கின்றேன்.
நான்
ஒன்றும் எங்கும் இல்லை. இவ்வுலகத்தில் சுற்றிக் கொண்டேதான் இருக்கின்றேன்.
இப்பொழுது கூட சொல்கின்றேன். ஒழுக்கமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். கற்றுக்
கொள்ளுங்கள். ஏதும் தேவை இல்லை. இறைவனை அன்பால் வணங்குங்கள். போதுமானது.
இன்னும் வருவார்கள் திருடர்கள். அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என.
இதை எல்லாம் செய்வேன் என்று ஏமாற்றி பிழைப்பார்கள். இப்பொழுது கூட
பிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதை யான் கண்ணால்
பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றேன். ஆனால் நிச்சயம், அவர்களுக்கு, அடி,
உதை பலமாக இருக்கும் என்பேன். எச்சரிக்கிறேன். எப்பொழுதோ, முன்பே
எச்சரித்து விட்டேன். ஆனாலும், இப்பொழுது கூட எச்சரிக்கின்றேன். பொறுமை
காத்திருங்கள். அன்பு, கருணையோடு, பகைமை இல்லாமல் இறைவனை வணங்குங்கள்.
எல்லாமே நீதானப்பா இன்று இறைவனை நோக்கி வணங்குங்கள். போதுமானது. அதை விட்டு
விட்டு, அதை செய்தால் இது நடக்கும், இதை செய்தால் அவை எல்லாம் நடக்கும்,
இப்பரிகாரத்தின் மூலம் அவை எல்லாம் நடக்கும் என்றெல்லாம் இயங்கிக்
கொண்டிருந்தால், நிச்சயம் விடிவுகாலம் வராது, வராது என்பேன். இதனால்
அன்போடு அலையுங்கள். உங்களுக்கு தேவை எது என்று கூட எங்களுக்குத் தெரியும்.
நற்பண்புகளோடு இருந்தாலே போதுமானது. நாங்கள் ஓடோடி வருவோமப்பா.
சித்தர்கள், யாங்கள், நல் மனிதர்கள் யாராவது இருக்கின்றார்களா என்று
பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம். ஆனாலும், அப்பனே, ஏமாற்று வேலைகள்
மிஞ்சுகிறது. மிஞ்சுகிறது, எதைப்போட்டாலும் சரியாக வரவில்லையே அப்பா.
அப்பனே தெளிந்து கொள், அன்பால் யான் கூறுகின்றேன். பொய், பித்தலாட்டம்
வேண்டாம் அப்பா. பித்தலாட்டம் செய்தால், பித்தலாட்டமே உன்னை அழித்துவிடும்.
அப்பனே! யானும் பூலோகத்தில் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். தான்
வாழ்வதற்காக, என்னென்னவோ செய்கின்றார்கள். வேண்டாம் அய்யனே, வேண்டாம்
அய்யனே! என்றுதான் இப்பொழுது கூட தாபத்தோடு சொல்கின்றேன்.
அனைவருக்கும்!
வேண்டாம்! இன்னும் சில காலங்கள் ஆனால் கட்டங்கள் வரும். கெட்டதை செய்து
கொண்டிருக்கின்றீர்கள். யான் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். ஆனாலும்
அவை வந்துவிட்டால், யான் கூட காப்பாற்ற மாட்டேன். இதோடு நிறுத்திக்
கொள்ளுங்கள். அனைத்தும் கூட. ஏன்? ஒன்றை தெரிவிக்கின்றேன் உங்களுக்கு. அதை
செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று சொல்கிறீர்களே, நீங்கள் ஏன்
செய்கின்றீர்கள். எங்களுக்கு தெரியாதா. யாங்கள் செய்வதற்கு, சரியானதாக.
கருணையோடு சொல்கின்றேன். அப்பா அகத்தீசா! எங்களுக்கு ஒன்றும் தெரியாது.
நீதான் அழைத்து செல்ல வேண்டும் என்று. அன்போடு வார்த்தை கூறும் யான், யான்
இருக்கின்றேன். அதை விட்டுவிட்டு, பின் காசுக்காக எதை எதையோ
செய்துவிட்டால், அப்பனே! நான் சொல்ல மாட்டேன், செய்துவிடுவேன். இப்பொழுது
கூட சொல்கின்றேன். யார் யார் எப்படி அழியப்போகிறீர்கள் இக்கலியுகத்தில்
என்று விளக்கமாக சொல்ல முடியும். கருணையோடு சொல்கின்றேன். பொய்,
பித்தலாட்டம் வேண்டாமப்பா! பொய் பித்தலாட்டமே அழிந்து விடும். ஏன்? உன்னை
மட்டும் அழிக்காது, பரம்பரையையை அழித்துவிட்டு போகும். தெரிந்து
கொள்ளுங்கள்.
மீண்டும் வந்து உரைக்கின்றேன் வாக்குகளை, பலமாக!


Comments
Post a Comment