Skip to main content

அன்புடன் அகத்தியர் - 16 - பொதுவாக்கு!

                                                       இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...


 சித்தன் அருள் - 1020 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு! 

இன்று குரு அகத்தியர் உரைத்த பொதுவாக்கு 

ஆதி ஈசன் பொற்பாதங்களை வணங்கி அகத்தியன் உரைக்கின்றேன் நல் முறையாக அனைவருக்கும் என் ஆசிகள்!

இந்த உலகம் இப்பொழுது அதர்மத்தை நோக்கித்தான் செல்லுகின்றது. அதர்மம் மிகுந்து விட்டது. அப்பனே நல்முறையாக ஈசனும் அதர்மத்தை அழித்து விட இன்னும் பல பரீட்சைகள் செய்வான் என்பேன். இனி நல்லவர்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ முடியும் என்பேன். தவறான பாதையில் செல்பவர்கள் அழிந்து போவார்கள் என்பேன்.

என் பக்தர்களுக்காக பிரம்மாவிடம் அதிகம் சண்டையிடுவது நான்தான். பிரம்மாவும், நல்முறையாக மனிதர்களுக்கு, அகத்தியா ஏன் இப்படி என்று கேட்க  என்னையே வணங்கி விட்டார்கள் என்ன செய்வது! பாசம் அவர்கள் என்மீது காட்டும் பக்தியையும் அன்பையும் திரும்பவும் அவர்களுக்கு நான் காட்டுகிறேன். என் பக்தர்களை நான் காப்பாற்ற வேண்டும் என்று அவனை அடிக்கடி தொந்தரவு செய்கின்றேன்.

அப்பங்களே நல் முறையாக வாழுங்கள்!

இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நான் திரும்ப திரும்ப அதையே தான் கூறிக் கொண்டு வந்திருக்கின்றேன்.

நல் முறையாக திரிபலா, திரிகடுகு சூரணம், தினமும் அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதைத் திரும்பத் திரும்ப உரைத்துக்கொண்டே வந்திருக்கின்றேன் நிச்சயம் என் பக்தர்கள் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன்.

நான் இப்பொழுதும் பூமியில்தான் வலம் வந்து கொண்டு இருக்கின்றேன். என்னுடைய பக்தர்களை ஒவ்வொருவரையும் பார்த்து நல்லது செய்து கொண்டே வந்து இருக்கின்றேன். நீங்கள் அனைவரும் புண்ணியரே! பல பிறவிகளில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே என் பெயரை உச்சரிக்க முடியும் என்னை வணங்கவும் முடியும்.

இப்பொழுது உலகமே இருளில் இருந்தாலும் நிச்சயம் நல்ல மாற்றங்கள் உண்டு என்பேன். தர்மம் செழித்து மேலோங்கும் பொழுது அனைவரும் நன்றாக வாழலாம் என்பேன். அதர்ம செயல்கள் அதிகமாக அதிகமாக இறைவனின் சோதனைகளும் அதிகமாகும் என்பேன். சில மனிதர்கள், மனிதர்களின் ஆசையைத் தீர்க்க அதைச் செய்கிறேன், இதைச் செய்து தருகிறேன் என்று சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். அவர்களெல்லாம் ஏமாற்றுக்காரர்கள். என்னுடைய அருள் இல்லாமல் சித்தர்களுடைய அருள் இல்லாமல் அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பேன். அவர்களை நம்பி நீங்கள் ஏமாற கூடாது என்பேன். இறைவனை நம்புங்கள், எங்களை நம்புங்கள். எங்களை நம்புபவர்களுக்கு நாளும் கோளும் எதுவும் செய்யாது என்பேன். நல்ல விதமாக வாழுங்கள் என் அப்பன்களே!  என்னுடைய நல்முறையாக ஆசிகள்! மீண்டும் வந்து வாக்கு உரைக்கின்றேன்!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அன்புடன் அகத்தியர்.....தொடரும்!

Comments

Popular posts from this blog

அன்புடன் அகத்தியர் - 21 - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!

                                                           இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!  24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி. ஆதி சித்தனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்! நல் முறையாக இவ்வாலயத்தில் பலப்பல சித்துக்கள் செய்தனர் முன் ஜென்மமதிலே முன் ஜென்மம் அதில் சித்திக்கள் செய்யும்பொழுது பின் ராஜராஜ சோழன் பின் பின் ராஜாங்கத்தை ஆள நினைக்கும் பொழுது தோல்வியுற்றான் என்பேன். ஆனாலும் அவன்தனை(ராஜ ராஜ சோழன்) கொல்ல மக்கள் பலப்பல வழிகளில் இருந்தார்கள் என்பேன். ஆனாலும் அதனைப் பின் நினைக்காமல...

அன்புடன் அகத்தியர் - 17 - பொதுவாக்கு!

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1022 - அருணாச்சலத்தில் குருநாதர் வாக்கு!  ஆடி அமாவாசை 08/8/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு உரைத்த இடம் திருவண்ணாமலை ஆதி சித்தனை மனதில் எண்ணி செப்புகிறேன் அகத்தியன். அப்பனே அருள்கள் அருள்கள் கொடுத்துக் கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றேன். அப்பனே நல் முறையாக மாற்றம் இவ்வுலகத்தில் சில சில தீவினைகளும் நடக்கும் என்பேன். ஆனாலும் எவையென்று கலியுகத்தில் நான் காப்பேன் என்பேன். அப்பனே நல் முறைகளாக இவ்வுலகத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றேன் நல் முறையாக என்னுடைய பக்தர்களுக்கும் ஆசிர்வாதம் தந்து கொண்டு வந்துதான் இருக்கின்றேன் அப்பனே நல் முறைகளாக குறைகள் இல்லை. அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் விதியின் பாதையிலே சென்று நல் முறையாக கடந்துவிட்டால்...

அன்புடன் அகத்தியர் - 14 - ஓதிமலை அருள்வாக்கு-1

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்...  சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1    ஓதி மலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு பாகம் 1 ஆதி பரம்பொருளை உள் நினைத்து உரைக்கின்றேன் அகத்தியன் அப்பனே நலன்கள் மேலோங்கும் என்பேன்! நல் முறையாக முருகனும் எவ்வாறு என்பதை உணர்ந்து நல் ஆசிகளை தந்து கொண்டே இருக்கின்றான்! ஆனால் மக்களோ எதை எதை என்று கூட மாயையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இப்படியே இவை செல்லச் செல்ல அழிவுதான் ஏற்படும் என்பேன். ஆனாலும் நல் முறையாக தாய் தந்தை நீயே அனைத்தும் நீயே என்று வேண்டிக் கொள்பவர்கள் மட்டும் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன்! என்பேன் இனிமேலும், நல் முறையாக அப்பனே எவை எவை கூறும் அளவிற்கு கூட தகுதியான மனிதர்களை மட்டும் தான் இங்கே அழைப்பான் மு...