இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
சித்தன் -அருள் 1833 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி ஆலய வாக்கு - பகுதி - 8 லிருந்து இன்றைய வாக்கினை அறிந்து உணர உள்ளோம் .
குருநாதர் :- இன்று நிச்சயம் அனைவருக்குமே ஒரு பின் சிறப்பான ஒன்றைச்
சொல்கின்றேன். அதைச் செய்தாலே (வெற்றியடையலாம்). அனைவரும் போய் அவரவர்
இடத்தில் உட்காருங்கள்.
(அடியவர்கள் அனைவரும்
கலியுக வரலாற்றில் மிக முக்கியமான வகுப்பைக் கேட்கத் தயாராக , சத்சங்க
வகுப்பில் குருநாதர் சுவடியின் முன் அமைதியாக அமர்ந்தார்கள்.)
குருநாதர் :- அப்பனே யான் சொல்லிக் கொடுக்கின்றேன். அதை அவர்கள் இடத்தில் சொல்.
(
இப்போது குருநாதர் சொல்லச் சொல்ல உடனே அடியவர்கள் அனைவரும் அப்படியே
உரைத்தனர். இது பொது வாக்கு. அனைவருக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல
வேண்டிய, நீங்கள் அனுதினமும் சொல்ல வேண்டிய வாக்கு. வாழுங்கள் அந்த மகத்தான
வாக்கின் உள் செல்வோம்.)
குருநாதர் :- தர்மம் செய்வேன்.
அடியவர்கள் :- தர்மம் செய்வேன்.
குருநாதர் :-அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
அடியவர்கள் :-அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
குருநாதர் :-போட்டி, பொறாமைகள் நீக்குவேன்.
அடியவர்கள் :-போட்டி, பொறாமைகள் நீக்குவேன்.
குருநாதர் :- அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்.
அடியவர்கள் :- அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்.
குருநாதர் :- பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்.
அடியவர்கள் :- பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்.
குருநாதர் :- அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்.
அடியவர்கள் :- அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்.
குருநாதர் :- அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல், பிறரும் கூட வாழவேண்டும்.
அடியவர்கள் :- அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
குருநாதர் :- பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.
அடியவர்கள் :- பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.
குருநாதர் :- பிறருக்காக உழைக்க வேண்டும்.
அடியவர்கள் :- பிறருக்காக உழைக்க வேண்டும்.
குருநாதர் :- பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும்.
அடியவர்கள் :- பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும்.
குருநாதர் :-அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே.
அடியவர்கள் :-அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே.
(
இந்த உறுதிமொழியைப் பின் வரும் பதிவிலும் படித்து அறிந்து உடனே செயல்
படுத்தவும். சித்தன் அருள் - 1595 - அன்புடன் அகத்தியர் - கோவையில்
அகத்தியர் உத்தரவு!)
( அகத்திய மாமுனிவர்
பக்தர்கள், அடியவர்கள் இதனைத் தினமும் அதி காலையில் ஒரு மந்திரம்
போலச்சொல்லுங்கள். அனைவரிடத்திலும் சொல்லுங்கள். அன்ன சேவை , வழிபாடுகள்
மற்றும் அனைத்து பொது இடத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். செயல்
படுத்துங்கள். இந்த வாக்குகள் உங்கள் எண்ணமாகட்டும். உங்கள் எண்ணங்கள்
சொல்லாகட்டும். உங்கள் சொல் அனைத்தும் குருநாதர் காட்டிய வழியில்,
செயல்களாகட்டும். இதை அனைவரும் கடைப்பிடித்தால் அடுத்த முறை பிரச்சினை
என்று இறை அருளால் உங்களுக்கு வரவே வராது.
குருநாதர் அகத்திய மாமுனிவர் வாக்கு - தினசரி அனைவரும் எடுக்க வேண்டிய உறுதிமொழி:-
1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்.
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்.
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்.
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்.
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே.



Comments
Post a Comment