Skip to main content

அன்புடன் அகத்தியர் - 6 - ஒரு எளிய மருந்து முறை!

                                                      இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...



 சித்தன் அருள் - 1001 - அன்புடன் அகத்தியர் - ஒரு எளிய மருந்து முறை! 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு சில விஷயங்களை கேட்டு அதற்கு நாடி வழி நம் குருநாதர் பதிலளிக்கையில், பொதுவாக ஒரு விஷயத்தை கூறினார். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

இனி வரும் காலங்களில், மனிதனுக்கு, என்ன வியாதி இது என்று தெரியாத அளவுக்கு நோய்கள் வரும், என்கிறார் அகத்தியப்பெருமான். அவற்றிலிருந்து விடுபட, கீழ் கூறிய மூலிகைகளை பொடித்து, ஒன்று சேர்த்து, தேனில் கலந்து, ஒரு சிறு உருண்டையாக்கி, தினம், காலை, மதியம், இரவு என மூன்று வேளை உட்கொண்டால், நோயிலிருந்து விடுபடலாம் என்ற தகவலை நமக்கு அருளிய பின் "இருவாரங்களுக்கு த்யானத்தில் இருக்கப்போகிறேன், அருள் வாக்கு யாருக்கும் இப்போது கிடையாது" என்று கூறி சென்றிருக்கிறார்.

அவர் கூறிய மூலிகைகள் (அளவு குறிப்பிடவில்லை):-

  1. எலுமிச்சை தோல் - 4
  2. சோம்பு
  3. கிராம்பு 
  4. பட்டை 
  5. சுக்கு 
  6. மிளகு 
  7. ஏலக்காய் 
  8. அதிமதுரம் 
  9. சித்தரத்தை 
  10. ஆடாதோடை 
  11. துளசி 
  12. மஞ்சள் 
  13. கடுக்காய் 
  14. இஞ்சி 
  15. கரிசலாங்கண்ணி 
  16. பொன்னாங்கண்ணி 
  17. மணத்தக்காளி 
  18. கோரைக்கிழங்கு 
  19. நித்யகல்யாணி 
  20. ஆவாரம்பூ பொடி 
  21. குறுமிளகு 
  22. கருஞ்சீரகம்
  23. செம்பருத்தி பூ 
  24. அவுரி இலை
  25. வெற்றிலை
  26. தூதுவளை 
  27. கற்பூரவல்லி
  28. நெல்லிப்பொடி
  29. காசினிப்பொடி
  30. வேப்பம்பூ
இயன்றவர்கள், அகத்தியப்பெருமானின் இந்த மூலிகைகளை பயன்படுத்தி, நல் ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அன்புடன் அகத்தியர்.....தொடரும்!

Comments

Popular posts from this blog

அன்புடன் அகத்தியர் - 21 - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!

                                                           இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!  24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி. ஆதி சித்தனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்! நல் முறையாக இவ்வாலயத்தில் பலப்பல சித்துக்கள் செய்தனர் முன் ஜென்மமதிலே முன் ஜென்மம் அதில் சித்திக்கள் செய்யும்பொழுது பின் ராஜராஜ சோழன் பின் பின் ராஜாங்கத்தை ஆள நினைக்கும் பொழுது தோல்வியுற்றான் என்பேன். ஆனாலும் அவன்தனை(ராஜ ராஜ சோழன்) கொல்ல மக்கள் பலப்பல வழிகளில் இருந்தார்கள் என்பேன். ஆனாலும் அதனைப் பின் நினைக்காமல...

அன்புடன் அகத்தியர் - 17 - பொதுவாக்கு!

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்... சித்தன் அருள் - 1022 - அருணாச்சலத்தில் குருநாதர் வாக்கு!  ஆடி அமாவாசை 08/8/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு உரைத்த இடம் திருவண்ணாமலை ஆதி சித்தனை மனதில் எண்ணி செப்புகிறேன் அகத்தியன். அப்பனே அருள்கள் அருள்கள் கொடுத்துக் கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றேன். அப்பனே நல் முறையாக மாற்றம் இவ்வுலகத்தில் சில சில தீவினைகளும் நடக்கும் என்பேன். ஆனாலும் எவையென்று கலியுகத்தில் நான் காப்பேன் என்பேன். அப்பனே நல் முறைகளாக இவ்வுலகத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றேன் நல் முறையாக என்னுடைய பக்தர்களுக்கும் ஆசிர்வாதம் தந்து கொண்டு வந்துதான் இருக்கின்றேன் அப்பனே நல் முறைகளாக குறைகள் இல்லை. அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் விதியின் பாதையிலே சென்று நல் முறையாக கடந்துவிட்டால்...

அன்புடன் அகத்தியர் - 24 - ஓதிமலையப்பர் தரிசனம்!

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்        இறைவா..அனைத்தும் நீயே.. சர்வம் சிவார்ப்பணம்...  சித்தன் அருள் - 1034 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலையப்பர் தரிசனம்!  ஓதிமலையப்பன் தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு, மதுரை.  ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் செப்புகிறேன் அகத்தியன்! அப்பனே நல் முறையாக இப்பொழுதும் கூட கந்தன் அங்கு சுற்றித் திரிகிறான் என்பேன் நல் முறையாக அமர்கிறான் என்பேன் அவனுக்குப் பிடித்த இடம் அங்கே இருக்கின்றது அங்கே சென்று அவன் அமர்ந்த இடத்தில் அமர உங்களுக்கும் அந்த புண்ணியம் கிடைக்கும் என்பேன். அடுத்த வாக்கில் அந்த இடத்தைப் பற்றி கூறுகின்றேன் அப்பனே நல் முறைகளாக யானே சொல்வேன் பொறுத்திருக.  ஓதி மலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன்  நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன் கார்த்திகை மாத...